Saturday 20 January 2018

போக்குவரத்து விதிகளை மீறும் பொ...போக்குகள்..

தலைப்புக்காக நண்பர்கள் முதலில் மன்னிக்கவும்..போக்குவரத்து விதிகளை மதிக்காத பண்ணாடைகளுக்கு இந்த மரியாதையே அதிகம்
என்று நினைக்கிறேன்..அதனால்தான் இந்தத் தலைப்பு..யாருக்கும் அறிவுரை கூறி திருத்துவதற்காக இப்பதிவு எழுதப்படவில்லை...எத்தனையோ திரைப்படங்களில் காட்டுகின்றனர்; தினம்தினம் செய்தித்தாள்களில் எத்தனையோ விபத்துச் செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன...ஆனால் எவனும் இங்கே திருந்திய பாடில்லை..(ஒருசிலரைத் தவிர., அதுவும் திருமணமாகி குழந்தைகள் பிறந்தபிறகு) ..மனதில் இருக்கும் கோபத்தை யாரிடமாவது கொட்டித் தீர்க்கவே இப்பதிவு..

ஒவ்வொரு நாளும் வெளியில் செல்லும்போது இப்போதெல்லாம் திரும்பி உயிருடன் வருவோம் என்ற நம்பிக்கை இல்லாமல்தான் செல்லவேண்டி இருக்கிறது..அதுவும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் உயிரைப் பிடித்துக் கொண்டுதான் செல்லவேண்டியிருக்கிறது ஒவ்வொரு நொடியும்.

புதுச்சேரியில் வாகனம் ஓட்ட இரண்டு கண்கள் போதாது..குறைந்தது ஆறு கண்களாவது வேண்டும்..இடது பக்கத்தில் ஏறிவரும் எருமைகளைப் பார்ப்பதா? சந்திலிருந்து சரக்கென்று உள்ளே புகும் சனியன்களைப் பார்ப்பதா? விதிகளை மதிக்காதவர்கள் என் தேசத்தில் திறமைசாலிகள்..எல்லாவற்றையும் ஏற்று நடப்பவர்கள் இங்கே ஏமாளிகள்...

இப்போதெல்லாம் நகரத்திற்கு சென்றுவந்தாலே மன உளைச்சலோடுதான் வீட்டுக்கு வரவேண்டியிருக்கு..போக்குவரத்து நெரிசல் பழகிவிட்டது..போக்குவரத்து விதிமீறல்களைப் பார்த்தே மன உளைச்சல் அதிகமாகிறது..எவன் எப்படி போனால் நமக்கென்ன என்று செல்ல முடியவில்லை..ஏனென்றால் அந்த பண்ணாடைகளால் அதிகம் பாதிக்கப்படுவது  ஒழுங்காகச் செல்லும் நாம்தான்..சாலை விபத்துக்களில் உயிரிழக்கும் பாதிப்பேர் ஒழுங்காக ஓட்டிவந்தவர்கள்தான்..அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

கற்பனையில் மட்டுமே அந்நியன் ஆகமுடிகிறது நம்மால் ..One way ல் செல்லும்போது எதிர்த்திசையில் எழுபது கிலோமீட்டர் வேகத்தில் எருமைகளைப் பார்க்கும்போது செருப்பாலடிக்கத் தோன்றும்...உண்மையில் நாம்தான் தவறாகச் செல்கிறோமோ என்று நினைக்கும் அளவுக்கு வேகமாக வருகிறார்கள்..

என் தேசத்தில்தான் சட்டம் எதுவும் செய்யாதே..அப்புறம் எப்படி பயப்படுவான்..போலீஸ் புடிச்சாலும் வட்டம், மாவட்டம்னு எவனாச்சும் போன் பண்ணுவான்..இதுதான் ஜனநாயக நாடாச்சே..

எதுனா ஒன்னுன்னா சிங்கப்பூர உதாரணமா சொல்றானுங்க..ஆனால் அது சர்வாதிகார சட்டங்கள் கொண்ட நாடென்பது எவனும் அறிவதில்லை..சட்டங்களும் தண்டனைகளையும் கடுமையாக்காமல் இவனுங்கள திருத்தவே முடியாது..மனுநீதிச்சோழன்கள்தான் தேவை இங்கே என் தேசத்திற்கு.. காந்தியே மறுபிறவி எடுத்து வந்தாலும் சிக்னலை மதிக்காதவனையும் தாறுமாறாய் ஓட்டும் தறுதலைகளையும் ரயில்வே கிராசிங்கில் வழியை அடைத்து நிற்கும் ரவுடிகளையும் பார்த்தால் அகிம்சையைத் தூக்கி எறிந்துவிட்டு ஆயுதமே கையில் எடுப்பார்..

எட்டாம் வகுப்பு படிக்கும் பன்றிகள் கூட Enfield ஓட்டுகிறது...யாரை செருப்பால் அடிப்பது இங்கே..ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கூறிக்கொண்டு ஒரு பெண் செல்போனை காதில் வைத்துக்கொண்டு வண்டி ஓட்டிச் சென்ற கொடுமையை நேற்று கண்டேன்..வாழ்க பெண் சுதந்திரம்!?   நீங்க யாரும் இல்லாத ரோட்டுல போய் எப்படியாவது ஓட்டி நாசமா போங்கடா...ஒழுங்கா போறவன் உயிர வாங்காதீங்கடா..சத்தியமா இதப்படிச்சு எவனும் திருந்த மாட்டானு தெரியும்...அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்கள் கலியபெருமாள்...

2 comments:

  1. உங்களின் மனஉலைச்சலை கொட்டி தீர்த்து விட்டீர்கள்.

    உண்மையிலேயே போக்கு வரத்து விதிகளை மதித்து நடப்போரே... அவசியமின்றி இறக்கின்றனர்... கொடுமைதான் நண்பரே...
    - கில்லர்ஜி

    ReplyDelete
  2. குடித்துவிட்டு ஓட்டும் கூமுட்டைகளைப் பற்றி இன்னும் எழுதல..அதை எழுதனும்னா ஒரு பதிவு போதாது..வருகைக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete