Tuesday 24 April 2018

ஜனங்களை வென்ற ஜானகியின் பாடல்கள்.

இசைப்பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு..தேர்வு விடுமுறை விட்டாச்சு..அதான் பதிவுலகம் பக்கம் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறேன்..கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்..
நேற்று (ஏப்ரல் 23) இசைக்குயில் ஜானகி அம்மாவின் எண்பதாவது பிறந்தநாள்..நேற்றைக்கே இப்பதிவை எழுத நினைத்தேன்..கொஞ்சம் வேலையால் முடியவில்லை..

நெடுந்தூரப் பயணங்களை நிமிடங்களில் முடித்துவைக்க நெஞ்சிற்கினிய பாடல்களால்தான் முடியும்..அப்படி ஒரு அருமையான குரலுக்கு சொந்தக்காரர்தான் ஜானகி அம்மாள்..அவருடைய ஆயிரக்கணக்கான பாடல்களில் சிறந்த பத்து பாடல்களை மட்டும் இங்கே வரிசைப்படுத்தியுள்ளேன்..நீங்களும் ரசித்து மகிழுங்கள்..

1. பாடல்: சின்னத்தாயவள்
  படம்:  தளபதி .
இளையராஜாவின் இசையில் வித்தகக்கவிஞர் வாலி எழுதிய அருமையான பாடல்..நிச்சயம் இந்தப் பாடலைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது..மணிரத்னம் படம் என்றாலே பாடல்கள் ஸ்பெஷல்தான்..அதிலும் இப்பாடல் ஜானகியின் காந்தக்குரலில் கவனம் ஈர்க்கும் ரகம்..

2.படம்: மௌனராகம்.
பாடல்: சின்னச்சின்ன வண்ணக்குயில்

மணிரத்னம், இளையராஜா இணையில் மற்றுமொரு அருமையான படம்.. ன,ண,ல,ள உச்சரிப்பு இப்பாடலில் அதிகம் வரும்..தமிழ் சினிமாவில் தவறில்லாமல் தமிழை உச்சரிக்கத் தெரிந்தவர்கள் சிலரே..மன்னவன் பேரைச்சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் என்ற வரிகளை அருமையாகப் பாடியிருப்பார்..

3.படம்: தேவர் மகன்.
பாடல்: இஞ்சி இடுப்பழகா

உலகநாயகன் கமலின் படம்..இசையுலகின் நவரச நாயகி என்று கூறுமளவுக்கு அனைத்து உணர்வுகளையும் அழகாய் வெளிப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே..
ரேவதி பாடுவது போலவே இருக்கும் கேட்கும்போது..

4. படம்: சங்கமம்.
பாடல்: மார்கழித் திங்களல்லவா?
பெரிய நடிகர்கள் இல்லாமல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அமைந்த அழகிய பாடல்..என்ன ஒரு குரல்..இசைக்குயில் பட்டம் பொருத்தமானதுதான்..

5.வைதேகி காத்திருந்தாள்.
பாடல்: அழகு மயில் ஆட..

மீண்டும் ஒரு நாட்டியப்பாடல் நம்ம இசைஞானியின் இசையில்..இளம் வயதில் கணவனை இழந்த ஒரு கைம்பெண்ணின் உணர்வுகளை ஒவ்வொரு வார்த்தையிலும் வடித்திருப்பார்..இசையை ரசிக்க பெரிய அறிவெல்லாம் தேவையில்லை என்று உணர்த்தும் பாடல்..

6.படம்: ஜானி
பாடல்: காற்றில் எந்தன் கீதம்
எதார்த்த இயக்குனர் மகேந்திரனின் படம்..இளையராஜாவின் இசை பிடித்தவர்களுக்கு நிச்சயம் ஜானகி அம்மாவையும் பிடிக்கும்..நான் ,என் நண்பன் புண்ணியமூர்த்தியோடு கிரிவலம் சென்று வரும்போது இது போன்ற பாடலைத்தான் கேட்டு வருவோம்..களைப்பும் தெரியாது கால்வலியும் தெரியாது..

7. படம்: பதினாறு வயதினிலே..
பாடல்: செந்தூரப்பூவே

இயக்குனர் இமயம் பாரதிராஜா படம்..சமீபத்தில் மறைந்த SRIDEVI யின் படம்..பருவப்பெண்ணின் ஏக்கங்களை பதினாறு வயதுப்பெண்ணாகவே பாடியிருப்பார்..இசையின் மூலக்கூறுகளை ஆராயும் அளவுக்கு விஞ்ஞானம் தெரியாது எனக்கு..ஆனால் மனக்காயங்களுக்கு பல நேரங்களில் மருந்தாவது இந்த இசையே..

8.படம்: கர்ணா.
பாடல்: மலரே மௌனமா..
இசையமைப்பாளர் வித்யாசாகரின் இசையில் அமைந்த பாடல்..அவருடைய சிறந்த ஐந்து பாடல் எடுத்தாலே நிச்சயம் இப்பாடலும் இடம்பெறும்..SPB சாரும் ஜானகியும் போட்டி போட்டுக்கொண்டு பாடிய ஒரு பாடல்..


9. மெல்லத்திறந்தது கதவு
பாடல்: ஊருசனம் தூங்கிடுச்சு.

மெல்லிசை மன்னரும், இசைஞானியும் சேர்ந்து இசையமைத்த படம்..மோகன் படம் என்றாலே பாடல்கள் அருமையாகத்தான் இருக்கும்..ஆயிரம்முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல்..கன்னிப்பொண்ணு நானே..என் மாமனே..என் மாமனே என்ற வரிகள் போதும் அவருடைய திறமைக்கு..

10. படம்: உயிரே
பாடல்: நெஞ்சினிலே

ஜானகி பாடல் என்று கூறிவிட்டு ROMANTIC பாடல் இல்லாமல் எப்படி?
ரொமான்ஸ் பாடல்கள் பாடல்கள் பாடுவதில் அவருக்கு நிகராக இன்னும் பிறக்கவில்லை என்றே கூறலாம்..ஏ.ஆர்.ரகுமானின் இசையில் காதலைக் கரைத்து ஊற்றிய ஒரு பாடல்..நெஞ்சினிலே ஊஞ்சலே என்று பாடும்போது நாமும் கொஞ்சம் ஆடித்தான் போவோம்..

ஆயிரக்கணக்கான பாடல்களில் இவைதான்  சிறந்தவை என்று அர்த்தமில்லை..என் மனதைவிட்டு நீங்காத சிலவற்றை மட்டுமே எழுதியுள்ளேன்..முடிந்தால் நீங்களும் கேட்டு மகிழுங்கள்..இந்த வாரத்தில் பிறந்தநாள் கொண்டாடும் நண்பர்களுக்கு இப்பதிவைச் சமர்ப்பிக்கிறேன்..நன்றியுடன் உங்கள் கலியபெருமாள்..

No comments:

Post a Comment